புதுதில்லி,நவம்பர்.19 - போலி வீடியோக்களை நம்பி மக்கள் ஏமார வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
முதலீட்டு திட்டங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் பேசுவது போது இணையதளத்தில் பரவும் Deep fake வீடியோக்களை நம்பி ஏமார வேண்டாமென ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, இதுபோன்ற திட்டங்களில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யுமாறு ரிசர்வ் வங்கியின் கவர்னர் பேசுவது போன்ற வீடியோக்கள் இணையதளத்தில் பரவிவருகின்றன.